மதுரையிலிருந்து சென்னைக்குச் சென்ற ஆம்னி பேருந்தை ஓட்டுநர் சாப்பிட்டுக் கொண்டே இயக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
மாட்டுத்தாவணி அருகே உள்ள ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து 40 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்தில் ஓட்டுநர் ஸ்டியரிங் மீது உணவை வைத்துச் சாப்பிட்டுக் கொண்டே ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கி உள்ளார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பயணிகளின் உயிரோடு விளையாடும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.