ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாம்பார் உப்பு ஏரிக்கு பிளமிங்கோ பறவைகள் வலசை வரத் துவங்கி உள்ளன.
ஜெய்ப்பூருக்கு மேற்கே அமைந்துள்ள சாம்பார் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரியாக உள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 9 சதவீதம் வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் உப்பு நிலங்களில் அதிகம் காணப்படும் பிளமிங்கோ எனப்படும் செந்நிற பூநாரைகள் மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து சாம்பார் உப்பு ஏரிப்பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வலசை வரத் துவங்கி உள்ளன.