அமெரிக்கா, சீனா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையேயான வர்த்தக போர் உச்சம் தொட்டதை அடுத்த இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், வர்த்தகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில், சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதில், அமெரிக்காவிற்கு காந்தங்கள் மற்றும் அரிய வகை தாதுக்களை சீனா வழங்கும் என்றும், அதேபோல், அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சீன மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருள்களுக்கு 55 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்கள் மீது சீனா 10 சதவீத வரி விதிக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் சிறப்பாக உள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.