டெல்டா பாசன வசதிக்காக சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான பாசன தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்களை தூவி திறந்து வைத்தார்.
இதன்மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 17.15 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.