அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து - 241 பேர் பலி!
Jan 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – 241 பேர் பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 13, 2025, 06:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர்  லியாகினர்.

ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கி 242 பயணிகளுடன் புறப்பட்டது. இதனை 8,200 மணி நேரம் விமானத்தை இயக்கி அனுபவம் வாய்ந்த ஏர்-இந்தியா விமானத்தின் முதன்மை பைலட் சுமித் சபர்வால் இயக்கினார்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, மீண்டும் அகமாதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க ஏர்-இந்தியா விமானி அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேகானி நகர் குடியிருப்பு பகுதியின் மேலே 852 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்ததால், அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 53 பிரிட்டிஷார், கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த 7 பேர் ஆகியோரும் அடங்குவர்.

இதனிடையே விமான விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். . சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிடோர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விமான விபத்தை தொடர்ந்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

விபத்து சம்பவத்தையடுத்து உடனடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: Boeing AI-171englandgujaratAhmedabadplanecrashgatwick
ShareTweetSendShare
Previous Post

I-STAR- வானில் நெற்றிக்கண் : அதிநவீன உளவு விமானத்தை வாங்க இந்தியா முடிவு!

Next Post

அகமதாபாத் விமான விபத்து – ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies