சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானத்தின்போது ராட்சத தூண்கள் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. போரூர் டி.எல்.எப் – எல்&டி அருகே கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 2 தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் உயிரிழந்தார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.