சென்னை பெருங்குடி பகுதி தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அதன் நிறுவனர் கார் பரிசளித்து
கவுரவித்துள்ளார்.
பெருங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதன் ஆண்டு விழாவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
அப்போது, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 25 ஊழியர்களை தேர்வு செய்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான SUV கார்களை தனியார் நிறுவன உரிமையாளர் பரிசளித்தார்.
தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக கார்களை பரிசளித்ததாக, தனியார் நிறுவனத்தின் சிஇஓ ராஜ் பாபு தெரிவித்தார். அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும் கார்கள் பரிசளிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.