வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
Jun 14, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தைப் போலவே கோவை மாவட்டம் மருதமலையையும் நெகிழி பயன்பாடு இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப்பைகளுக்குத் தடைவிதிக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக்கத் திகழும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி மாவட்டம் என்ற இலக்கை அடைய அடையும் நோக்கில் அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் நிலையில், அதே நடவடிக்கையைக் கோவை மாவட்டம் மருதமலையிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாகக் கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், அங்கு பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் அதிகளவு காணப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

நெகிழிப் பைகளுக்குத் தடை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், அதற்கான நடைமுறைகள் முறையாகக் கண்காணிக்கப்படாததால், பயன்படுத்திவிட்டு வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நெகிழிப்பைகள் பயன்பாடு இல்லாத மருதமலை என்ற சூழலை உருவாக்கக் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையையும் மீறி உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுவதே அதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் புகழ்பெற்ற மருதமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடம் நெகிழிப் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வனவிலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பைகளை முற்றிலுமாக ஒழிக்கக் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: tamil janam tvImpact on wildlife: Request to take action on plastic-free Marudhamalaநெகிழியில்லா மருதமலைமருதமலைவனவிலங்குகளுக்கு பாதிப்பு
ShareTweetSendShare
Previous Post

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Next Post

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

Related News

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

புதுக்கோட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி – தலைமறைவாக இருந்தவர் போலீசில் ஆஜர்!

சிவகிரி இரட்டை கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!

அரசு பேருந்து ஏசியில் இருந்து ஒழுகிய தண்ணீர் – பயணிகள் அவதி!

அகமதாபாத் விமான விபத்து – லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்தவர் பலி!

நிலை குலைந்தது பாலம் மட்டுமல்ல, தமிழக அரசின் நிர்வாகமும்தான் – தமிழிசசை விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெங்களூருவில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

ருத்ராஸ்திரா போர் விமானத்தின் சோதனை வெற்றி!

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை!

வாடிப்பட்டி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் சேதம்!

காஞ்சிபுரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

அதி கனமழை எச்சரிக்கை – மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!

அதி கனமழை எச்சரிக்கை – நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – ஈரான் மீதான தாக்குதல் குறித்து விளக்கம்!

ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க பல ஆண்டுகள் திட்டம் – ஆபரேஷன் ரைசிங் லயன் குறித்து இஸ்ரேல் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies