வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 15, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தைப் போலவே கோவை மாவட்டம் மருதமலையையும் நெகிழி பயன்பாடு இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப்பைகளுக்குத் தடைவிதிக்க வேண்டிய அவசியம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக்கத் திகழும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி மாவட்டம் என்ற இலக்கை அடைய அடையும் நோக்கில் அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் நிலையில், அதே நடவடிக்கையைக் கோவை மாவட்டம் மருதமலையிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாகக் கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், அங்கு பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் அதிகளவு காணப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

நெகிழிப் பைகளுக்குத் தடை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், அதற்கான நடைமுறைகள் முறையாகக் கண்காணிக்கப்படாததால், பயன்படுத்திவிட்டு வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நெகிழிப்பைகள் பயன்பாடு இல்லாத மருதமலை என்ற சூழலை உருவாக்கக் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் சோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையையும் மீறி உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுவதே அதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் புகழ்பெற்ற மருதமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடம் நெகிழிப் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வனவிலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பைகளை முற்றிலுமாக ஒழிக்கக் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: வனவிலங்குகளுக்கு பாதிப்புtamil janam tvImpact on wildlife: Request to take action on plastic-free Marudhamalaநெகிழியில்லா மருதமலைமருதமலை
ShareTweetSendShare
Previous Post

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

Next Post

வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா : கனவை நனவாக்கிய பவுமா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies