செவி சாய்க்குமா அரசு? - சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!
Jul 31, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 15, 2025, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் துயரத்தில் உள்ளனர். பள்ளியின் முன்பு குண்டும்  குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையாலும்  குப்பை கழிவுகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

சேலம் உத்தம சோழபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.  1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான கட்டடம் தனியாகவும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றொரு கட்டடமும் உள்ளன. அதாவது 5ஆம் வகுப்பு வரை உள்ள கட்டடம் வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தம சோழபுரம் பஞ்சாயத்திலும்,  8ம்  வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் வகுப்பறை கட்டடம் பனைமரத்துப்பட்டி ஒன்றியம் நெய்க்காரப்பட்டி பஞ்சாயத்திலும்  செயல்படுகின்றன.

இரண்டுக்கும் 300 மீட்டர் இடைவெளியே உள்ளன. இந்த இரண்டு கட்டடங்களுக்கும் இடையே ஆறு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலை இன்னும் மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதுதான் மாணவ மாணவிகளை அவதிப்பட வைத்துள்ளது.

புதிய சாலை அமைக்கப்படும் எனக் கூறி தோண்டப்பட்ட பள்ளத்தால் மாணவ மாணவிகள் அவதிப்படும் நிலையில்  குப்பைகளின் தேக்கமும், கழிவு நீரும் மாணவ மாணவிகள் மட்டுமின்றி நோய் பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளன மேலும் பள்ளியில் 135 மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.  இவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை போதிய கதவுகள் இல்லாமல் திறந்தவெளி கழிப்பிடமாகக் காட்சியளிக்கிறது.

குப்பைகள் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியிலும், அருகே உள்ள கரபுரநாதர் கோயில் மதில் சுவர் மீதும் கொட்டப்படுவதால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் முகாமிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில் மாணவ மாணவியர்களை மட்டும் மறந்தது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்துக்கும் தமிழக கல்வித்துறைக்கும் உத்தரவிட்டு சாலை , புதிய சுகாதார வசதிகளை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: DMKMK StalinWill the government listen? - Request to the Chief Minister who came to Salemgovt school
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Related News

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies