நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் - அச்சத்தில் மக்கள்!
Jan 14, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாலைப்பணி, மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் பதிக்கும் பணி என வருடத்தின் 365 நாட்களிலும் நடைபெறும் பணிகளால் கோடம்பாக்கம் மற்றும் சூளைமேடு பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாதாரண மழைக்கே தேங்கியிருக்கும் மழைநீரும், குண்டும் குழியுமான சாலைகளும் எப்போது வேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும் இந்த சாலை அமைந்திருக்கும் பகுதி சென்னையின் மையப்பகுதிகளில் ஒன்றான சூளைமேடு பகுதி தான். சூளைமேடு மட்டுமல்ல, ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம், பெரியார் பாதை என அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. மழைநீர் வடிகால் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி என மாதம் ஒரு குழி தோண்டப்படுவதும், பணிகள் முடிந்தும் அக்குழிகள் மூடப்படாமல் இருப்பதுமே அடிக்கடி விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு மழையின் போது சாலைகளிலும், வீடுகளுக்கு முன்பாகவும் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறுகிய சாலைகளில் இருபுறமும் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது

பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்களை உடனுக்குடன் மூட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போதுவரை நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. நீண்ட நெடிய மக்கள் போராட்டத்திற்கு ஒரு பள்ளத்தை மூடினால் அதற்குள் அடுத்த பள்ளத்தைத் தோண்டி விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வடபழனி முதல் கோடம்பாக்கம் வரை நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் சாலையாகப் பெரியார் பாதை சாலை மாறியிருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பல மணி நேரத்திற்கு நீடிக்கிறது. குடிநீர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு அவசியமானதோ, அதே அளவுக்கு அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதும் அவசியமானது என்பதை உணர்ந்து இனியாவது முறையான மாற்று ஏற்பாடுகளோடு சென்னை மாநகராட்சி பணியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: நகரமா? நரகமா?CHENNAI NEWSchennai news todayCity? Hell? : Potholes that claim lives - People in fearஉயிர்பலி வாங்கும் பள்ளங்கள்
ShareTweetSendShare
Previous Post

பிழையின்றி திருக்குறள் ஒப்புவிப்பு : அசாத்திய திறமை கொண்ட மழலைக்கு குவியும் பாராட்டு!

Next Post

இஸ்ரேல் – ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies