நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் - அச்சத்தில் மக்கள்!
Sep 18, 2025, 12:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாலைப்பணி, மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் பதிக்கும் பணி என வருடத்தின் 365 நாட்களிலும் நடைபெறும் பணிகளால் கோடம்பாக்கம் மற்றும் சூளைமேடு பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாதாரண மழைக்கே தேங்கியிருக்கும் மழைநீரும், குண்டும் குழியுமான சாலைகளும் எப்போது வேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும் இந்த சாலை அமைந்திருக்கும் பகுதி சென்னையின் மையப்பகுதிகளில் ஒன்றான சூளைமேடு பகுதி தான். சூளைமேடு மட்டுமல்ல, ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம், பெரியார் பாதை என அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. மழைநீர் வடிகால் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி என மாதம் ஒரு குழி தோண்டப்படுவதும், பணிகள் முடிந்தும் அக்குழிகள் மூடப்படாமல் இருப்பதுமே அடிக்கடி விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு மழையின் போது சாலைகளிலும், வீடுகளுக்கு முன்பாகவும் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறுகிய சாலைகளில் இருபுறமும் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது

பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்களை உடனுக்குடன் மூட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போதுவரை நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. நீண்ட நெடிய மக்கள் போராட்டத்திற்கு ஒரு பள்ளத்தை மூடினால் அதற்குள் அடுத்த பள்ளத்தைத் தோண்டி விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வடபழனி முதல் கோடம்பாக்கம் வரை நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் சாலையாகப் பெரியார் பாதை சாலை மாறியிருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பல மணி நேரத்திற்கு நீடிக்கிறது. குடிநீர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு அவசியமானதோ, அதே அளவுக்கு அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதும் அவசியமானது என்பதை உணர்ந்து இனியாவது முறையான மாற்று ஏற்பாடுகளோடு சென்னை மாநகராட்சி பணியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: நகரமா? நரகமா?CHENNAI NEWSchennai news todayCity? Hell? : Potholes that claim lives - People in fearஉயிர்பலி வாங்கும் பள்ளங்கள்
ShareTweetSendShare
Previous Post

பிழையின்றி திருக்குறள் ஒப்புவிப்பு : அசாத்திய திறமை கொண்ட மழலைக்கு குவியும் பாராட்டு!

Next Post

இஸ்ரேல் – ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies