நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் - அச்சத்தில் மக்கள்!
Jun 14, 2025, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாலைப்பணி, மழைநீர் வடிகால், குடிநீர் குழாய் பதிக்கும் பணி என வருடத்தின் 365 நாட்களிலும் நடைபெறும் பணிகளால் கோடம்பாக்கம் மற்றும் சூளைமேடு பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாதாரண மழைக்கே தேங்கியிருக்கும் மழைநீரும், குண்டும் குழியுமான சாலைகளும் எப்போது வேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும் இந்த சாலை அமைந்திருக்கும் பகுதி சென்னையின் மையப்பகுதிகளில் ஒன்றான சூளைமேடு பகுதி தான். சூளைமேடு மட்டுமல்ல, ட்ரஸ்ட்புரம், கோடம்பாக்கம், பெரியார் பாதை என அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. மழைநீர் வடிகால் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி என மாதம் ஒரு குழி தோண்டப்படுவதும், பணிகள் முடிந்தும் அக்குழிகள் மூடப்படாமல் இருப்பதுமே அடிக்கடி விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு மழையின் போது சாலைகளிலும், வீடுகளுக்கு முன்பாகவும் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறுகிய சாலைகளில் இருபுறமும் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது

பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்களை உடனுக்குடன் மூட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போதுவரை நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. நீண்ட நெடிய மக்கள் போராட்டத்திற்கு ஒரு பள்ளத்தை மூடினால் அதற்குள் அடுத்த பள்ளத்தைத் தோண்டி விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வடபழனி முதல் கோடம்பாக்கம் வரை நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் சாலையாகப் பெரியார் பாதை சாலை மாறியிருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பல மணி நேரத்திற்கு நீடிக்கிறது. குடிநீர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு அவசியமானதோ, அதே அளவுக்கு அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டியதும் அவசியமானது என்பதை உணர்ந்து இனியாவது முறையான மாற்று ஏற்பாடுகளோடு சென்னை மாநகராட்சி பணியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: CHENNAI NEWSchennai news todayCity? Hell? : Potholes that claim lives - People in fearஉயிர்பலி வாங்கும் பள்ளங்கள்நகரமா? நரகமா?
ShareTweetSendShare
Previous Post

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Next Post

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

Related News

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

புதுக்கோட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி – தலைமறைவாக இருந்தவர் போலீசில் ஆஜர்!

சிவகிரி இரட்டை கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!

அரசு பேருந்து ஏசியில் இருந்து ஒழுகிய தண்ணீர் – பயணிகள் அவதி!

அகமதாபாத் விமான விபத்து – லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்தவர் பலி!

நிலை குலைந்தது பாலம் மட்டுமல்ல, தமிழக அரசின் நிர்வாகமும்தான் – தமிழிசசை விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெங்களூருவில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

ருத்ராஸ்திரா போர் விமானத்தின் சோதனை வெற்றி!

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை!

வாடிப்பட்டி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் சேதம்!

காஞ்சிபுரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

அதி கனமழை எச்சரிக்கை – மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!

அதி கனமழை எச்சரிக்கை – நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – ஈரான் மீதான தாக்குதல் குறித்து விளக்கம்!

ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க பல ஆண்டுகள் திட்டம் – ஆபரேஷன் ரைசிங் லயன் குறித்து இஸ்ரேல் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies