தெலுங்கு திரையுலகின் பிரபல பின்னணி பாடகியான மங்லி , தனது பிறந்த நாள் பார்டியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படவில்லை என வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ள பின்னணி பாடகி மங்லி, அண்மையில் தனது பிறந்த நாள் பார்டியை தனியார் ரிசார்டில் கொண்டாடினார்.
அதில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்பாடு இருந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா, வெளிநாட்டு மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
பாடகி மங்லி போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.