சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 61 வயதுடைய முதியவருக்கு ஒரே நேரத்தில் இரு வேறு அறுவை சிகிச்சைகளைச் செய்து உயிர்பிழைக்க வைத்த மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் 61 வயதுடைய பிரான்சிஸ் என்பவர் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாய் சேதம் அடைந்து, இக்கட்டான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரான்சிஸை காப்பாற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் புதிய யுக்தியைக் கையாண்டனர்.
பிரான்சிஸுக்கு இரு வேறு அறுவை சிகிச்சைகளைச் செய்து மருத்துவர்கள் அவருடைய உயிரைக் காப்பாற்றினர். இது இந்தியாவிலேயே முதன்முறையாக நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை என மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.