ஈரானின் அணு ஆயுத கட்டமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் NATANZ அணு மையம் உட்பட பல்வேறு அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது அணு மையத்திலிருந்த அணுக்கதிர்வீச்சில் கசிவு ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதற்கிடையே, 9 அணுக்குண்டுகளைத் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வைத்துள்ளதாகவும், இதனை தங்களுக்கு எதிராகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.