அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய்ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விஜய் ரூபானி மிகவும் கடின உழைப்பாளி என்றும் கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியாக இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொது வாழ்வில் அடிமட்ட தொண்டனாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய விஜய் ரூபானி குஜராத்தின் முதலமைச்சராக உயர்ந்தார் என்றும் தெரிவித்துள்ளார். பல சவாலான காலங்களில் தன்னுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றியதாகவும் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.