போயிங் 787, 788, 789 ஆகிய விமானங்களில் சோதனை மேற்கொள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர்இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏர்இந்தியாவின் போயிங் 787, 788 789 ஆகிய 3 ரக விமானங்களை உடனடியாக தரையிறக்கி ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்துஇயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
எரிபொருள் இருப்பு, விமானி அறையில் உள்ள ஏர் கம்ப்ரசர், ஹைட்ராலிக் சோதனை உட்பட 6 வகையான சோதனைகளை விமான நிறுவனங்கள் நாள்தோறும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விமானக் கட்டுப்பாட்டு ஆய்வு அறிக்கையை 2 வாரங்களுக்கு ஒருமுறை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.