ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கமளித்தார்.
ஈரானின் முக்கிய ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவ அலுவலகங்கள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்ரேஷன் ரைசிங் லயன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்களில் ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் இந்த தாக்குதல்களுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ஆகியோருடன் உரையாடியுள்ளார்.