காஞ்சிபுரம், செங்கம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் பூக்கடை சத்திரம், இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த ஒரு வார காலமாக வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில், பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தோக்கவாடி, மண்மலை, மில்லத் நகர், பரமனந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென்று திரண்ட கரு மேகங்களால் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இந்த மழையின் காரணமாக வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சுழல் நிலவுவதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.