தாம்பரம் அருகே அரசு குளிர்சாதன பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் இருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி செல்லக் கூடிய குளிர்சாதன பேருந்தில் ஐயப்பன் என்பவர் பயணம் செய்துள்ளார்.
கூடுவாஞ்சேரி நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் அமர்ந்திருந்த இருக்கையில் தண்ணீர் ஒழுகியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பேருந்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ன பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரும்பாலான அரசுப்பேருந்துகளில் ஏசி சரியாக இயங்குவது இல்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.