புதுக்கோட்டையில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்தவர் காவல்நிலையத்தில் ஆஜரானார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி என்பவர், தீபாவளி பண்டு சீட்டு நடத்தியுள்ளார். அவரிடம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், பணத்தை கொடுக்காமல் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவானார்.
இந்த நிலையில், மகன் காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதனைதொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி சரணடைந்ததை அறிந்த மக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.