கார்கில் போரின் ஒரு பகுதியான டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
கார்கில் போரின் போது டோலோலிங் சிகரம் வழியாக பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயன்றது. அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி இந்திய ராணுவம் டோலோலிங் சிகரத்தை மீட்டெடுத்தது.
இந்நிலையில் டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய ராணுவத்தினர் டோலோலிங் சிகரத்திற்கு நினைவு பயணத்தை தொடங்கினர். தொடர்ந்து சிகரத்தை அடைந்த ராணுவ வீரர்கள் தேசிய கொடி ஏந்தி உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்ந்தனர்.