மேலூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாதவூர் சோழ பேரேரி பெரிய கண்மாயில், ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி நடந்த மீன்பிடி திருவிழாவை கிராம பெரியவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, பெரிய கண்மாயில் இறங்கிய கிராம மக்கள் பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களான கச்சா, ஊத்தா உள்ளிட்டவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.