விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை, சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு பொருட்கள் பிரித்து அனுப்பப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து நியாயவிலை கடைக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை மற்றொரு சரக்கு வாகனத்தில் ஊழியர்கள் கடத்தி சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.