ஈரானின் முக்கிய தலைவர் அலி கமேனி, அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஆகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ள தெஹ்ரானின் பாஸ்டர் பகுதியில், இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கு நிறுவப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேல் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இஸ்ரேலிய படைகள் உயர்மட்ட ஈரானிய தலைமைப் பகுதிகளை நேரடியாக குறி வைப்பதால் மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.
ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் டெல் அவிவ்-ல் ஈரானின் தாக்குதலால் சேதமடைந்த கட்டடம் ஒன்று பற்றி எரிந்தது. அந்த கட்டடத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறிய நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்றன. ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.