மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பகுதி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த டன் கணக்கிலான நெல் மூட்டைகள் வீணாகியுள்ளது.
கட்டக்குளம் கிராமத்தில் அரசு கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் முட்டைகள் பாதுகாப்பு இன்றி மழையில் நனைந்து, சுமார் 500 மேற்பட்ட நெல் மூட்டைகள் மக்கியும் முளைத்தும் சிதறிக் கிடக்கும் அவல நிலையும் உருவாகியுள்ளது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.