ஈரானின் முக்கிய தலைவர் அலி கமேனி, அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஆகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ள தெஹ்ரானின் பாஸ்டர் பகுதியில், இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்கு நிறுவப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேல் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலிய படைகள் உயர்மட்ட ஈரானிய தலைமைப் பகுதிகளை நேரடியாகக் குறிவைப்பதால் மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.