தமிழை வைத்து அரசியல் செய்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் எண்ணம் 2026-ல் நடக்காது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவாரூரில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,
தமிழை வைத்து ஆட்சியைப் பிடிப்பது நடக்காது என்றும் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும் என்று நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.
தமிழர்கள், தமிழர் பண்பாட்டை வைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர் என்று குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், தமிழுக்குத் தொண்டு செய்வது போல் நடித்து ஆட்சியைப் பிடிக்கிறார் ஸ்டாலின் என்று அவர் கூறினார்.
2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழை வைத்து அரசியல் செய்து ஆட்சியைப் பிடிப்பது நடக்காது என்றும் டாஸ்மாக் ஊழலில் தலையிட அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் அரசாங்கத்தையே நடத்திய உதயநிதியின் நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.