இஸ்ரேலுக்கு உதவினால் தாக்குதல் நடத்துவோம் : ஈரான் எச்சரிக்கை!
Mar 15, 2026, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேலுக்கு உதவினால் தாக்குதல் நடத்துவோம் : ஈரான் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேலுக்கு உதவ நினைத்தால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவ தலைமை தளபதி முகமது பகேரி, ஈரானிய புரட்சிப்படை தளபதி ஹொசைன் சலாமி, 9 அணுசக்தி விஞ்ஞானிகள் உட்படப் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் அயன் டோம் என்ற வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. 2-வது நாளாக ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவில் படையைத் திரட்டும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் வலுக்கும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தடுத்தாலோ, அவர்களுக்கு உதவினாலோ அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கப்பல்கள் மற்றும் பிராந்திய முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே ஈரானின் பதிலடி தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், மக்கள் புகலிடம் தேடி மாற்று இடங்களுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.

அதேபோல, பாதுகாப்பு காரணங்களுக்காக அங்குள்ள பல மருத்துவமனைகளின் முக்கிய வார்டுகள், நிலத்தடி வாகன நிறுத்துமிடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. நோயாளிகளை அங்கு அழைத்துச் செல்ல ஐசியு வசதியுடன் கூடிய பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

Tags: Iran warns: We will attack if we help Israelஈரான் எச்சரிக்கைதாக்குதல்ஈரான் தலைநகர்
ShareTweetSendShare
Previous Post

கல்வியில் அறிவாற்றலையும், விளையாட்டில் திறமையையும் வளர்க்க வேண்டும் : முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

Next Post

தஞ்சாவூர் : வடிகால் வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies