ஒடிசாவில் ஆயுதங்களைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
புவனேஸ்வர் அருகே 5 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.
இவர்களில், 3 பேர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ள இடம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.