மதுரை சத்திரப்பட்டி காவல்நிலையம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் பிரபல ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர் தாலுகாவில் உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் பால்பாண்டி என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வழக்கம்போல பணியிலிருந்த அவர் மீது பிரபாகரன் உட்பட இருவர் தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அவரை அறைக்குள் பூட்டிவிட்டு காவல்நிலையத்தைச் சூறையாடினர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.அரவிந்த், ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிரபாகரன் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.