திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்க 2-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கோதையாற்றில் வரும் நீரின் அளவு அதிகரித்ததால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், பாதுகாப்பு கருதி 2-வது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு, தடுப்பு வேலி அமைத்து கண்காணப்படுகிறது.
அருவியில் நீர்வரத்து சீராக உள்ள பகுதிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.