தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக் காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது.
இதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவர்கள் உட்படத் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் விசைப்படகுகளின் மூலம் கடலுக்குச் சென்றனர்.
காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமார் 800 விசைப்படகுகள் பழுது நீக்கி இரு மாதங்களுக்குப் பிறகு நள்ளிரவில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்றனர்.
இதையடுத்து சிறிய வகை படகுகள் மூலம் குறைந்த தூரம் சென்று பிடித்து வரப்படும் மீன்கள் பழைய ஏலக்கூடம் அருகே விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஏராளமான அசைவ பிரியர்கள் சிறிய வகை மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர்.