ஈரானின் உச்ச தலைவரைக் கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையைத் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேட்டியளித்த அமெரிக்க அதிகாரிகள், கமேனியை கொல்ல தங்களிடம் சிறந்த திட்டம் உள்ளது எனவும் சரியாகப் பின்பற்றினால் அவரைக் கொல்லலாம் எனவும் இஸ்ரேல் கூறியதாகக் குறிப்பிட்டனர்.
ஆனால், அதனை அதிபர் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் திட்டம், உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.