மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதற்கான பணி 2027-ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் உட்பட சுமார் 35 லட்சம் பேர் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதற்காக அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தப்படும் எனவும் கணக்கெடுப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.