புனே அருகே ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 4 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மாவல் பகுதியில் உள்ள குண்டமாலா என்ற சுற்றுலா தளத்தில் வார விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
அங்குள்ள இந்திராயாணி ஆற்றின் குறுக்கே 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இரும்பு பாலத்தில் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர்.
அப்போது பாலம் இடிந்து விழுந்ததால் 50க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த 51 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
இதனிடையே பாலம் விபத்து குறித்து பிரதமர் மோடி முதலமைச்சர் பட்னவிஸிடம் கேட்டறிந்தார்.