கேரளாவில் தொடர் கனமழை காரணமாகச் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
கேரள மாநிலம் காசர்கோடு, கண்ணூர், மலப்புரம், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கோழிக்கோட்டில் கொட்டித் தீர்த்த மழை காரணமாகச் சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கண்ணூரில் பெய்த கனமழை காரணமாகச் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கொச்சியில் கடல் அதிக சீற்றுத்துடன் காணப்படுவதால் அருகில் உள்ள ஆலுவாக மகாதேவா கோயிலுக்குள் கடல்நீர் புகுந்தது. இதன் காரணமாகப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரமம் அடைந்தனர்.