இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ரபேல் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் கூறியது பொய் என்று டசால்ட் நிறுவனத்தின் CEO எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.
ஆனால் இந்தியாவின் ரபேல் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் கூறிய நிலையில் இது பொய்யான தகவல் என்று மத்திய அரசு மறுத்தது.
இந்நிலையில் ரபேல் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று ரபேல் விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர், இந்திய விமானப்படையிடம் இருந்து போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தங்களுக்கு வரவில்லை என்றும் கூறினார்.