ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பஹல்காம் சுற்றுலாத் தலமானது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பெஹல்காம் சுற்றுலாத் தலத்தின் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் உள்ளூர் வாசிகள் மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாபிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததால், சுற்றுலா வணிகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.