மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் நாய் புகுந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
கீழ அகலங்கன் கிராமத்தில் மணிகண்டன் என்பவரது வீட்டிற்குள் அவரது சித்தப்பா சீமானின் வளர்ப்பு நாய் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறில் மணிகண்டனின் சகோதரர் மகேந்திரன், சீமானையும் அவரது மகன் மற்றும் பேரனையும் அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது. படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சீமான் உயிரிழந்தார்.