கும்பகோணம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாகப் பணம் கேட்ட விற்பனையாளரிடம் மதுபிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பந்தநல்லூர் குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க வந்த நபரிடம் விற்பனையாளர் 10 ரூபாய் கூடுதலாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்தார்.