மதுரையில் திமுக பொதுக் கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடையின் மேற்கூரை காற்றில் பறந்து விழுந்ததில் பசுமாடு காயம் அடைந்தது.
மதுரை வளர்நகர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்திற்காக மேடை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக மேடையின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. அருகில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது மேற்கூரை விழுந்து காயத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாடு மீட்கப்பட்டது. திமுக பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடை, 15 நாட்கள் ஆகியும் அகற்றப்படாத நிலையில், மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படும் என்ற அச்சத்திலேயே வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.