கொடைக்கானலின் குணா குகை பகுதியில் மரத்தில் அமர்ந்துகொண்டு 500 ரூபாய் நோட்டுகளை வீசி எறியும் குரங்கின் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள குணா குகை சுற்றுலாத் தலத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் உடமைகளை குரங்குகள் பறித்துச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. குரங்குகள் தொல்லையைக் கட்டுப்படுத்த சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், கர்நாடக சுற்றுலாப் பயணி வைத்திருந்த 500 ரூபாய் கட்டை குரங்கு தூக்கிச் சென்றது.
பின்னர் மரத்தில் அமர்ந்தபடி அவற்றை ஒவ்வொன்றாக வீசி எறியும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.