பிரதமர் மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது -  அமித்ஷா
Aug 13, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது –  அமித்ஷா

Web Desk by Web Desk
Jun 16, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக்கால ஆட்சியில், நாடு பாதுகாப்பானதாக மாறியுள்ளது என்று மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நேற்று (15.06.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான அமித்ஷா, உத்தரபிரதேச காவல்துறையில் பணிக்குத் தேர்வான 60,244 சிவில் காவலர்களுக்கு (கான்ஸ்டபிள்கள்) பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய  அமித் ஷா,  உத்தரப்பிரதேச காவல்துறை நாட்டில் மிகப்பெரிய காவல் படை என்றும், ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து இருந்ததாகவும், 2017-ம் ஆண்டில், யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் முதலமைச்சரான பிறகு, உத்தரப்பிரதேச காவல்துறை மீண்டும் புதிய உச்சங்களை அடைவதற்கான பாதையில் முன்னேறத் தொடங்கியது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானவுடன், நாட்டில் காவல் துறையை நவீனமயமாக்கும் பணிகளை விரைவுபடுத்தியதாக அமித்ஷா குறிப்பிட்டார்.  ஆனால் உத்தரப்பிரதேசத்தில், அந்த செயல்முறை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொடங்கியது என்று அமித்ஷா  கூறினார்.

2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் எந்த சீர்திருத்த செயல்முறையும் அப்போதைய மாநில அரசால் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று அமித்ஷா குற்றம்சாட்டினார்.

2017-ல்தான் உத்தரப்பிரதேச காவல்துறையிலும் சீர்திருத்த செயல்முறை தொடங்கியது என்று அவர் கூறினார். தற்போது 60,244 இளைஞர்களின் ஆட்சேர்ப்பு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நியாயமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மொத்தம் 48 லட்சம் விண்ணப்பங்களில், 60,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்சம், அரசியல் செல்வாக்கு, பரிந்துரைகள், சாதி அல்லது ஊழல் ஆகியவை எதுவும் இல்லாமல் முற்றிலும் தகுதி அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் 12,000 க்கும் மேற்பட்டோர் இளம் பெண்கள் என்றும்  அமித்ஷா தெரிவித்தர். மத்திய அரசு பெண்களுக்கு விதித்துள்ள இடஒதுக்கீட்டு விதிகள் உத்தரபிரதேசத்தில் 100% பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

4 லட்சம் பணியாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய காவல் துறையில் தற்போது 60,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்வதாக அமித் ஷா கூறினார். 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் வரை எந்தவொரு முதல் தகவல் அறிக்கை மீதும் (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்று அமித்ஷா  கூறினார்.

தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீதியை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஒரு காலத்தில் கலவரங்களின் மையமாகக் கருதப்பட்ட உத்தரப் பிரதேசம், இப்போது முற்றிலும் கலவரமற்றதாக மாறிவிட்டது என்றும், இந்த பாரம்பரியத்தை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுக்கால ஆட்சியில், நாடு பாதுகாப்பானதாக மாறியுள்ளது என்று அமித் ஷா கூறினார். ஒரு காலத்தில் 11 மாநிலங்களில் பரவியிருந்த நக்சலிசம், இப்போது மூன்று மாவட்டங்களில் மட்டுமே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2026 மார்ச் 31-க்குள், இந்தியா நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும் என்று உள்துறை அமைச்சர்  அமித் ஷா கூறினார்.

Tags: Under the leadership of Prime Minister Narendra Modithe police department across the country is being modernized - Amit Shahமத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா
ShareTweetSendShare
Previous Post

மருது சகோதரர்களின் வீரத்தை போற்றுவோம் – நயினார் நாகேந்திரன்

Next Post

திருப்பூர் : நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர் – வீடியோ வைரல்!

Related News

ஜம்மு காஷ்மீர் : சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏந்தி யாத்திரை!

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி : கருணைக்கொலை செய்யக்கோரி முதிய தம்பதியர் கோரிக்கை!

சென்னை : ஒலிப்பெருக்கியின் சத்தத்தை குறைக்க சொன்ன போலீசாருடன் வாக்குவாதம்!

சட்டம் – ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் பதுங்குவது ஏன்? – இபிஎஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies