சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III’ என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டூலிட்ஸின் அழைப்பை ஏற்றுப் பிரதமர் மோடி அந்நாட்டிற்குச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
லிமாசோலில் தொழிலதிபர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோ டவுலிட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாதாரத்தில் 3வது இடத்தை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வதாகப் பிரதமர் மோடி மாநாட்டில் தெரிவித்தார்.
அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டூல்ஸ் சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த விருதை பெற்ற பின் பேசிய பிரதமர் மோடி, இந்த விருது வழங்கிய சைப்ரஸ் அரசாங்கத்திற்கும் சைப்ரஸ் மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் ஒரு மரியாதை என்றும் இது அவர்களின் திறன்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஒரு மரியாதை என தெரிவித்தார்.
இது நமது கலாச்சாரம், சகோதரத்துவம் மற்றும் வசுதைவ குடும்பகம் என்ற சித்தாந்தத்திற்கும் ஒரு மரியாதை என்றும் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுக்கு இதை அர்ப்பணிக்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கௌரவத்தை மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். இந்த விருது அமைதி, பாதுகாப்பு, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நமது மக்களுக்கான நமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் அடையாளமாகும் என்று பிரதமர் மோடி கூறினார்.