லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறங்கியது.
லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானம் புறப்பட்டது. நடுவானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில், விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தது.
இதையடுத்து விமானி விமான நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதனால் புறப்பட்ட 37வது நிமிடத்தில் அந்த விமானம் உடனடியாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும், லண்டன் – சென்னை இடையே இரு மார்க்கமாக செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.