இலங்கையில் உள்ள சீதையம்மன் கோயிலில் ராமர் – சீதை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இலங்கையின் நுவரெலியா மாகாணம், சீதாஎலிய பகுதியில் உள்ள சீதையம்மன் கோயில், ராமாயணத்தில் அசோகவனம் என கூறப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு சீதைக்காக கட்டப்பட்டுள்ள கோயிலில் ராமர்-சீதா பிராட்டியின் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை 8 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் சிறப்பு பூஜைகள் தொடங்கிய நிலையில், கன்னிகாதானம் மற்றும் திருமாங்கல்யதாரண நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. பின்னர், ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடந்த நிலையில், உற்சவ மூர்த்திகளான ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர், கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட அனுமான் சிலையை ஆலயத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.