பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய அவர், பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்தும் திமுகவின் முயற்சி எடுபடாது என தெரிவித்தார்.
ஒவ்வொரு முறை முதலைச்சரை சந்திக்கும்போதும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பாமக-வில் உள்ள சில சூழ்ச்சியாளர்கள் குறித்து வரும் நாட்களில் தெரிவிக்கிறேன் என்றும், கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள் பின்னால் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லமுடியும் என்றும், அமைதியாக இருப்பது என் பலமே தவிர பலவீனமில்லை என்றும் அன்புமணி குறிப்பிட்டார்.