தொடர் மழை காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜுன் மாதத்தில் காரையார் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி உள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காரையாறு சேர்வலாறு போன்ற அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக 143 அடி கொள்ளளவு கொண்ட காரையாறு அணையின் நீர்மட்டம் ஆனது ஒரேநாளில் 4 அடி உயர்ந்து தற்போது 130 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல 156 கன நீர்மட்டம் கொண்ட சேர்வலார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 142 அடியை தாண்டி உள்ளது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி ஆயிரத்து 400 கொள்ளளவு தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.