ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் - செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!
Jul 28, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 17, 2025, 06:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் தொலைக்காட்சி நிலைய கட்டடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

ஈரானின் குவாம் நகர் அருகே உள்ள போர்டோவ் அணு உலை மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரான் ராணுவத்தின் குவாட் படைப் பிரிவின் கட்டுப்பாட்டு மையத்தையும் தாக்கி அழித்ததாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம், ஈரான் அரசு தொலைக்காட்சி நிலைய கட்டடம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு, பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். கட்டடத்தை ஏவுகணை தாக்கியதை உணர்ந்த அவர், பதறியடித்து ஓடினார். இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.

இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கட்டடம் முழுமையாக சேதமடைந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. இந்த தாக்குதலின்போது தொலைக்காட்சி நிலைய கட்டடத்தில் ஊழியர்கள் பலர் இருந்தனர்.

இதில், பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், டெஹ்ரானிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் கையெழுத்திடக் கூறிய ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்றும், தான் அதை மீண்டும் மீண்டும் சொல்லி விட்டதாகவும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

Tags: Air StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelmedia office attackedLebanonHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

Next Post

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies