ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் - செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!
Jan 14, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 17, 2025, 06:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் தொலைக்காட்சி நிலைய கட்டடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

ஈரானின் குவாம் நகர் அருகே உள்ள போர்டோவ் அணு உலை மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரான் ராணுவத்தின் குவாட் படைப் பிரிவின் கட்டுப்பாட்டு மையத்தையும் தாக்கி அழித்ததாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம், ஈரான் அரசு தொலைக்காட்சி நிலைய கட்டடம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு, பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். கட்டடத்தை ஏவுகணை தாக்கியதை உணர்ந்த அவர், பதறியடித்து ஓடினார். இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.

இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கட்டடம் முழுமையாக சேதமடைந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. இந்த தாக்குதலின்போது தொலைக்காட்சி நிலைய கட்டடத்தில் ஊழியர்கள் பலர் இருந்தனர்.

இதில், பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், டெஹ்ரானிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் கையெழுத்திடக் கூறிய ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்றும், தான் அதை மீண்டும் மீண்டும் சொல்லி விட்டதாகவும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

Tags: Air StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelmedia office attackedLebanonHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

Next Post

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies