ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் - செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!
Sep 17, 2025, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 06:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் தொலைக்காட்சி நிலைய கட்டடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

ஈரானின் குவாம் நகர் அருகே உள்ள போர்டோவ் அணு உலை மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரான் ராணுவத்தின் குவாட் படைப் பிரிவின் கட்டுப்பாட்டு மையத்தையும் தாக்கி அழித்ததாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம், ஈரான் அரசு தொலைக்காட்சி நிலைய கட்டடம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு, பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். கட்டடத்தை ஏவுகணை தாக்கியதை உணர்ந்த அவர், பதறியடித்து ஓடினார். இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.

இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கட்டடம் முழுமையாக சேதமடைந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. இந்த தாக்குதலின்போது தொலைக்காட்சி நிலைய கட்டடத்தில் ஊழியர்கள் பலர் இருந்தனர்.

இதில், பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், டெஹ்ரானிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் கையெழுத்திடக் கூறிய ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்றும், தான் அதை மீண்டும் மீண்டும் சொல்லி விட்டதாகவும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

Tags: Air StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelmedia office attackedLebanonHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

Next Post

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

Related News

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை!

மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டம்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து!

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies