சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சீருடையில் புகுந்த நபர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டார்.
பாம்பு பிடிக்க வந்ததாகக் கூறி மதிமுக அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட அந்த நபர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புத்துறை சீருடையில் இருந்த அந்த நபரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவரது பெயர் அல்போன்ஸ் என்று தெரியவந்தது.